skip to main |
skip to sidebar
புன்னகையும் கண்ணீர் சிந்தும் -
உன் இதழ்களில் மலர வில்லை என்றால் !
கண்ணீரும் புன்னகைக்கும் -
உன் மேனியில் உருண்டு ஓடினால் !!
காகிதம் தந் வலி மறக்கும் -
உன்னை பற்றி கவி எழுதினால் !
பேனா முனை தூக்கில் தொங்கும் -
உன் பெயர் அன்றி வேறொன்றைய் எழுதினால் !!
மழையும் கண்ணீர் சிந்தும் -
உன் மேனி தீண்ட வில்லை என்றால் !!
தென்றலும் சூடும் -
உன்னை குளிர வைக்க வில்லை என்றாள் !!
இயற்கைக்கே இந்நிலை என்றால்
என் நிலை ? !!!
பூவே -
உன்னை என் மனம் என்னும் பூந்தொட்டியில் வைத்தேன்
நீ வாடாமல் இருக்க தினமும் கண்ணீரை தண்ணீராய் சொரிந்து கொண்டு இருக்கிறேன்
நீயும் வாடாமல் தான் இருக்கிறாய்
வேறு ஒருவரின் இதயத்தில் !!!
இவ்வுலகில் பல விஷயங்கள் முன்னேறி உள்ளன
இதில் காதல் மட்டும் வீதி விளக்கா என்ன
காதலும் முன்னேற்ற பாதையில் தான் செல்கிறது
முந்தைய காதல் :
நட்பில் தொடங்கி காதலில் முடியும்
இன்றைய காதல் :
காதலில் தொடங்கி நட்பில் முடிகிறது
நான் எழுதும் முதல் மடல்....
பேசும் திறன் இருந்தால் பலவாக வர்ணித்திருப்பேன்
அவள் நீ இலாமல் தனிமையில் ப்டும் துயரை
பரந்த வானம்
வெள்ளி நிலவு
மின்னும் நக்ஷத்திரம்
சில்லென்ற காற்று
இனிமையான சங்கீதம்
இவை அனைத்தாயும் அவளுக்கு காட்டினேன்
ஓர் சிறிய அரும்பு புன்னகைக்காக
எல்லாம் வீண் பொழுது தான் போனது
பொழுது புலரும் வேளையில் உனது
காலை வணக்கம் அவள் முகத்தில் தந்த மலர்ச்சி
என்னை பகலை பார்த்து பொறாமைப்பட வைத்தது - ஆம்
நான் பகலாய இருந்தால் அவளது புன்கையை பார்த்து கொண்டே இருக்கலாமே.....
இப்படிக்கு இரவு.........
என்னை வானம் என்று வர்ணித்தாய்
நீ நிலவாக இருப்பாய் என்று நினைத்தேன் - ஆனால்
நீ வானவில்லாக உதித்து மறைந்தாய்...
உன்னை பார்த்த முதல் நாள் -
தொலைந்தது என் இதயம் மட்டும் அல்ல
வாழ்க்கையும் தான் ....
தாயின் கையால் அமுது உண்ண வேன்டிய வயதில்
மற்றவர் சாப்பிட்ட எச்சில் பாத்திரம் கழுவும் அவலம்
ஒடி ஆடி விளையாட வேன்டிய வயதில்
ஒரே இடத்தில் முடக்கி வேலை வாங்கும் கொடூறம்
தந்தையிடம் கதை கேட்க வேன்டிய வயதில்
முதளாலியில் விசவை கேட்கும் நிலை
பிஸ்க்ட் வேன்டும் பொம்மை வேன்டும் என்று கேட்டு அழ வேன்டிய வயதில்
அம்மா கை காலெல்லாம் வலிக்கிறதே என்று அழும் பிஜ்ஜு குழந்தைகளின் கதறல்
தேவையா குழந்தை தொழிலாளி ???
ஒரு நிமிடம் அந்த இடத்தில் நம்மை வெய்த்து சிந்தித்தால்
உணரமுடியும் அதன் வலியை
இப்படித்தான் முன்னேற வேன்டுமா இந்தியா ???
அன்னையும் பிதாவும் முன்னரி தெய்வம் - ஆனால்
உன் கடை விழி பார்வை கிட்டினாலே இன்பமுறும்
உன் ஒரு துலி கண்ணீரையும் காண சகியாமல்
கண்ணீரின் கதையை அறிந்து வேன்டுமானால்
அதர்க்காக என் உயிரையும் கொடுக்க துனியும்
நீ பேசுவது இரன்டு நொடியே ஆனாலும் அதர்க்காக
நாள் முழுவடும் காத்திருந்து
இந்த உலகில் உள்ள இன்பங்கள் யாவும்
அந்த இரன்டு நொடியில் தான் அடங்கி இருப்பதாய் எண்ணி
பசி தூக்கம் அன்னியப்பட்டு
ரத்த சம்பந்தமே இல்லாத உன்னை வருடம்
முழுவடும் என் நெஞ்ஜில் சுமந்த - நான்
எந்த விதத்தில் தாழ்ந்தவள் ???
நம் காதலின் தோல்விக்கு காரனம் யார்??
நீயா ? நானா ? நம் பெற்றோர்களா ?
உன்மையில் நம் காதல் தோல்வியுரவே இல்லை
ஆம் - திருமணத்தில் முடிந்தால் தான்
வெற்றி என்று எந்த மடயன் சொன்னது ??
நீ என்னை விட்டு சென்று வருடங்கள் ஆன போதும்
இன்னும் உன்னை சுமக்கிரதே என் இதயம் - எதனால் ?
நான் உன்மேல் வெய்த்த உன்மையான காதலால்
அது என்றைக்கு அழிகிரதோ அன்று தான்
நம் காதலுக்கு தோல்வி....
நாளை காதல்ர் தினம்
பூவுக்கே பூ குடுக்க வேண்டிய
இக்கட்டான நிலை - என்ன குடுக்க ?
ரோஜா உன் இதழின் முன் கால் தூசு
முல்லை உன் பர்க்களின் முன் தூக்கிட்டு கொள்ளும்
குண்டு மல்லி உன் கண்களின் முன் அவை எம்மாதிரம் ?
ஒரு பூந் தோட்டத்தர்க்கே பூ குடுக்க முடியுமா?
ஆகவெ ஆசை என்னும் நாறில் என் இதயத்தை தொடுத்து
உனக்கு சமர்ப்பிக்கிரேன்
என்னை சூடிக்கொள்வாயா ???
பறக்கும் வண்டி ஒண்று வேண்டும்
உலகில் கொட்டி கிடக்கும் அழகை பார்க்க
என்னை நிலை நிருத்தி கொள்ள
வெற்றியின் உச்சியை எட்ட
என்னை விட்டு சென்றவர்கள் கூனி குருக
என்னை அரவணைத்தவர்கள் மகிழ
முடமான என் கால்களுக்கு
பறக்கும் வன்டி ஒண்று வேண்டும் !!!
நீ என்னுடன் இருந்த நாட்கள் -
இரவின் அழகை உணர்ந்தேன் ,
நிலவில் உன் முகம் கண்டேன் ..
ஒவ்வொரு விஷயமும் புதிதாய் தெரிந்தது ,
மரம் , செடி, கொடி ,
குழந்தையின் சிரிப்பு,கவிதை ,வானவில்,
மழை, வெயில், பனி ...
நீ என்னை விட்டு பிரிந்த பின் -
உயிர் உள்ள பிணம்.......
உன்னை
கடிவதா?
மறப்பதா?
இரண்டுமே முடியவில்லை என்னால்
உன்னால் மட்டும் எப்படி முடிந்தது!!!
நான் நூறு வருடம் வாழ வேண்டும் ,
என் கடைசி மூச்சு ,
உன் மடியில்
"நான் உன்னை கதலிக்கிறேன்"
என்று சொல்லி பிரிய வேண்டும்
பரந்து விரிந்த வானத்தில் ஒரு இடதில் மட்டும் கண்ணை பரிக்கும் பிரகாசம் - காரணம் ??
நிலவு வெட்கி முகம் கவிழ,
விண்மீன்கள் படபடப்புடன் மேகத்தின் பின் சென்று ஒளிந்து கொள்ள -
ஆங்கே தெரிந்தது உன் முகம்....
உன்னுள் உறைய வேண்டும்
என்னை ஏன் வெளியேற்றினாய் என்று
கண்ணீரும் அழும் !!!
என்ன தவம் செய்தேன்
உன் நாசியில் நுழைந்து நுழைந்து
வெளி வருகிறேன் என்று
காற்று மகிழும் !!
நான் தமிழ் மொழி சொல்லாக
மாற விரும்புகிறேன் என்று
வெற்று மொழி சொற்க்கள் இறைவனை வேண்டும்
உன் இதழ்களில் பிறக்க !!!
உன் கையால் இறப்பதை
பாக்கியமாக எண்ணி தான்
வெட்ட வெட்ட மறுமுறை
வளர்கிறதோ நகம் !!!
தொலைக்காட்சி,கணினி எல்லாம் எதற்கு??
உன் விழி போதும்..
அதன் நடனத்தைக் காண
இரண்டு கண்கள் போதாது..
உன்னைப் பற்றி
கவி எழுதிட
நினைத்தால்
கவிக்கும் கவி மறக்கும்......
நீ !!!
இது - பார்க்க,படிக்க,எழுத எளிது
ஆனால் அவ்வார்த்தை தரும் பொருளை எழுதினால்
உலகில் காகித தட்டுப்பாடு வந்துவிடும்..
உன்னைப் பார்த்த முதல் நாள்
ஆ !! ஒரு நல்ல மனிதனை பார்த்து விட்டோம் என்று நினைத்தேன்..
நீ என்னை காதலிக்கிறாய் என்று சொன்ன தினம்
உயிர் அற்ற என் உடம்பில் உயிர் பாய்வதை உணர்ந்தேன்..
உன் முதல் முத்தம்
என்னுள் இன்னும் ஆசைகள் புதையுன்டு இருப்பதை உணர்ந்தேன்..
பல மடங்காக திருப்பி அளிக்க எண்ணினேன்
ஆனால் பெண்களுக்கே உரித்தான நாணம் என்னை ஆட்கொண்டது..
என் வாழ்வில் ஒளியே இல்லை என்று நினைத்த தருணத்தில்
நீ பல வண்ணங்களைக் காட்டினாய்..
உயிர்,ஆசை,வண்ணம் இவை அனைத்தும் நீ என்ற உன்னுடன் சேர்ந்து
நாம் ஆகும் நாளிற்க்காக ஆவலுடன் காதிருக்கிறேன்...
துன்பம் - பருத்தி போல்
கண்ணிர் சிந்தினால் சுமை அகி விடும்
எதிர்த்து நின்றால் பறந்து போகும்
உன் கண்களில் மின்னலின் ஒளியை உணர்ந்தேன்
உன் குழந்தை பேச்சில் உன் வெள்ளை மனதை உணர்ந்தேன்
உன் சிரிப்பில் என் மகிழ்ச்சியை உணர்ந்தேன்
உன் அருகாமையில் ஸ்வர்க்கத்தை உணர்ந்தேன்
உன் கண்டிப்பில் ஒரு தந்தையை உணர்ந்தேன்
உன் அன்பில் ஒரு தாயை உணர்ந்தேன் - ஆனால்
உன் பிரிவில் தான் என் உயிரே உன்னிடம் இருப்பதை உணர்ந்தேன்....
சூரியனையும் வெளிச்சத்தையும் எப்படி பிரிக்க முடியதோ
அதே போல் எளிமையையும் உன்னையும் பிரிக்க முடியாது
இருட்டையும் கருப்பையும் எப்படி பிரிக்க முடியதோ
அதே போல் உன்னையும் உன் மலர்ந்த புன்னகையையும் பிரிக்க முடியாது -
உன்னை விட்டு பிரிய மனம் இல்லாமல் தான் உன் பெயருடனே ஒட்டிகொன்டதோ வெற்றி !!!
காதலின் மரணம் கல்லறையில் அல்ல
காதலின் உன்மையன மரணம் காதலர்கள்
காதலை மறக்கும் போது தான்....