Wednesday, March 7, 2007

நீ !!!
இது - பார்க்க,படிக்க,எழுத எளிது
ஆனால் அவ்வார்த்தை தரும் பொருளை எழுதினால்
உலகில் காகித தட்டுப்பாடு வந்துவிடும்..

உன்னைப் பார்த்த முதல் நாள்
ஆ !! ஒரு நல்ல மனிதனை பார்த்து விட்டோம் என்று நினைத்தேன்..

நீ என்னை காதலிக்கிறாய் என்று சொன்ன தினம்
உயிர் அற்ற என் உடம்பில் உயிர் பாய்வதை உணர்ந்தேன்..

உன் முதல் முத்தம்
என்னுள் இன்னும் ஆசைகள் புதையுன்டு இருப்பதை உணர்ந்தேன்..

பல மடங்காக திருப்பி அளிக்க எண்ணினேன்
ஆனால் பெண்களுக்கே உரித்தான நாணம் என்னை ஆட்கொண்டது..

என் வாழ்வில் ஒளியே இல்லை என்று நினைத்த தருணத்தில்
நீ பல வண்ணங்களைக் காட்டினாய்..

உயிர்,ஆசை,வண்ணம் இவை அனைத்தும் நீ என்ற உன்னுடன் சேர்ந்து
நாம் ஆகும் நாளிற்க்காக ஆவலுடன் காதிருக்கிறேன்..
.