உன்னுள் உறைய வேண்டும்
என்னை ஏன் வெளியேற்றினாய் என்று
கண்ணீரும் அழும் !!!
என்ன தவம் செய்தேன்
உன் நாசியில் நுழைந்து நுழைந்து
வெளி வருகிறேன் என்று
காற்று மகிழும் !!
நான் தமிழ் மொழி சொல்லாக
மாற விரும்புகிறேன் என்று
வெற்று மொழி சொற்க்கள் இறைவனை வேண்டும்
உன் இதழ்களில் பிறக்க !!!
உன் கையால் இறப்பதை
பாக்கியமாக எண்ணி தான்
வெட்ட வெட்ட மறுமுறை
வளர்கிறதோ நகம் !!!
தொலைக்காட்சி,கணினி எல்லாம் எதற்கு??
உன் விழி போதும்..
அதன் நடனத்தைக் காண
இரண்டு கண்கள் போதாது..
உன்னைப் பற்றி
கவி எழுதிட
நினைத்தால்
கவிக்கும் கவி மறக்கும்......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment