Wednesday, June 20, 2007

பூவே -
உன்னை என் மனம் என்னும் பூந்தொட்டியில் வைத்தேன்
நீ வாடாமல் இருக்க தினமும் கண்ணீரை தண்ணீராய் சொரிந்து கொண்டு இருக்கிறேன்
நீயும் வாடாமல் தான் இருக்கிறாய்
வேறு ஒருவரின் இதயத்தில் !!!

முன்னேற்ற பாதையில் காதல

இவ்வுலகில் பல விஷயங்கள் முன்னேறி உள்ளன
இதில் காதல் மட்டும் வீதி விளக்கா என்ன
காதலும் முன்னேற்ற பாதையில் தான் செல்கிறது

முந்தைய காதல் :
நட்பில் தொடங்கி காதலில் முடியும்

இன்றைய காதல் :
காதலில் தொடங்கி நட்பில் முடிகிறது

Tuesday, June 12, 2007

இரவின் மடல

நான் எழுதும் முதல் மடல்....
பேசும் திறன் இருந்தால் பலவாக வர்ணித்திருப்பேன்
அவள் நீ இலாமல் தனிமையில் ப்டும் துயரை
பரந்த வானம்
வெள்ளி நிலவு
மின்னும் நக்ஷத்திரம்
சில்லென்ற காற்று
இனிமையான சங்கீதம்
இவை அனைத்தாயும் அவளுக்கு காட்டினேன்
ஓர் சிறிய அரும்பு புன்னகைக்காக
எல்லாம் வீண் பொழுது தான் போனது
பொழுது புலரும் வேளையில் உனது
காலை வணக்கம் அவள் முகத்தில் தந்த மலர்ச்சி
என்னை பகலை பார்த்து பொறாமைப்பட வைத்தது - ஆம்
நான் பகலாய இருந்தால் அவளது புன்கையை பார்த்து கொண்டே இருக்கலாமே.....

இப்படிக்கு இரவு.........